கே.எல்.ராகுல் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் நன்றாக வழிநடத்தியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் நன்றாக வழிநடத்தியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கழுத்து வலி காரணமாக கேப்டன் ஷுப்மன் கில் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய நிலையில், அணியை கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தினார்.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் நன்றாக வழிநடத்தியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது. பந்துவீச்சாளர்களை அவர் நன்றாக பயன்படுத்தினார். ஈரமான பந்தில் பந்துவீச வேண்டிய நிலை இருந்தபோதிலும், அதனை கே.எல்.ராகுல் குறையாக கூறவில்லை. இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, அவரிடம் இந்திய அணி என்ன வித்தியாசமாக செய்திருக்கலாம் எனக் கேட்டபோது, டாஸ் வென்றிருக்கலாம் என பதிலளித்தார். இந்த தொடரில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் அவர் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டார். அணியில் உள்ள வீரர்கள் கே.எல்.ராகுலுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். ஒவ்வொரு முறையும் குல்தீப் யாதவ், நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் (டிஆர்எஸ்) முடிவை எடுக்குமாறு கே.எல்.ராகுலிடம் கூறுவார். குல்தீப் யாதவை ராகுல் சமாதானப் படுத்த வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக, கே.எல்.ராகுலின் கேப்டன்சி மிகவும் நன்றாக இருந்தது என்றார்.

The former South African player has praised KL Rahul for leading the Indian team well in the ODI series against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை விவகாரம்: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 எம்எல்ஏ.க்கள் - 500 திமுகவினா் கைது

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம்: டிச.15-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

ரூ.6.15 லட்சம் வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்: மக்களவையில் தகவல்

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

SCROLL FOR NEXT