டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் களமிறங்குவார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் பிப்.15ஆம் தேதி இலங்கையில் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன.
அரசியல் பிரச்னைகளால், தொடக்கத்தில் விளையாட மறுத்த பாகிஸ்தான் அணி பின்னர் சில நிபந்தனைகளுடன் விளையாட சம்மதித்தது.
இலங்கையில் நடைபெறும் என்பதால், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அதிகமான வீரர்களை களமிறக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங்கின் ஓவரில் அதிகபட்சமாக 36 ரன்கள் சென்றது. இந்நிலையில், அவருக்குப் பதிலாக குல்தீப் சேர்க்கப்படுவாரன கூறப்படும் நிலையில், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருப்பதாவது:
அனைத்து வீரர்களும் விக்கெட் எடுத்தார்கள். அர்ஷ்தீப் 4 ஓவர்கள் பந்து வீசவில்லை. ஷிவம் துபே 2, ஹார்திக் 4 ஓவர்களும் வீசினார்கள். இதிலிருந்து, குல்தீப் அடுத்த போட்டிக்கு வருவார் என்றே தோன்றுகிறது.
இலங்கையில் சுழல் பந்துவீச்சுக்கு ஆதரவு இருக்குமென்பதாலும் இந்திய அணி 3 சுழல்பந்துவீச்சாளர்களுடன் விளையாடிய வரலாறும் இருக்கின்றன.
கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் பிளேயிங் லெவனில் குல்தீப் வர எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்திக் பாண்டியா தொடக்க ஓவரை வீசியதும் குல்தீப் வருவதற்கான அறிகுறியே. அக்ஷர் படேலும் 2 விக்கெட்டுகள் எடுத்தது நல்லது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.