FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.

Updated On : 20 பிப்ரவரி 2025, 7:02 pm IST
- படம் | AP
பகிர்:

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்காரை ஷமி 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார் முகமது ஷமி. அதன் பின், மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோரின் விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

Advertisement

Advertisement

200 விக்கெட்டுகள்

ஜேக்கர் அலியின் விக்கெட்டினைக் கைப்பற்றிய முகமது ஷமி, ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமை அவரையேச் சேரும். 104 போட்டிகளில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

குறைந்த போட்டிகளில் விளையாடி 200 விக்கெட் வீழ்த்தியவர்கள்

மிட்செல் ஸ்டார்க் - 102 போட்டிகள்

முகமது ஷமி - 104 போட்டிகள்

டிரண்ட் போல்ட் - 107 போட்டிகள்

பிரெட் லீ - 112 போட்டிகள்

ஆலன் டொனால்டு - 117 போட்டிகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments