FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி!

குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி 2025, 9:46 pm IST
- படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
பகிர்:

குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் விளையாடியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 127/5

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வியாட் ஹாட்ஜ் களமிறங்கினர். பெங்களூரு அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. வியாட் ஹாட்ஜ் 4 ரன்களிலும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடி வந்த எல்லிஸ் பெரி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

ராகவி பிஸ்ட் 22 ரன்கள், கனிகா அஹுஜா 33 ரன்கள் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் 20 ரன்கள் எடுத்ததன் மூலம் பெங்களூரு அணியின் ஸ்கோர் ஓரளவுக்கு உயர்ந்தது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.

குஜராத் தரப்பில் டீண்ட்ரா டாட்டின் மற்றும் தனுஜா கன்வர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆஷ்லே கார்டனர் மற்றும் கஸ்வி கௌதம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments