லிட்டன் தாஸ் படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறவில்லை: வங்கதேச வீரர்

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபையில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மற்ற அணிகளுக்கான ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான ஆட்டங்கள் துபையில் நடத்தப்படுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தங்களது அணிகளை கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதுவரை நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

சரியாக விளையாடவில்லை

சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சாம்பியன் டிராபி தொடருக்கான அணித் தேர்வு எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் அணியில் இடம்பெறாதது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவு. அவர்கள்தான் யார் விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறார்கள். அணிக்காக சிறப்பாக செயல்படுவதே எனது வேலை. அதனை சில காலமாக என்னால் செய்ய முடியவில்லை. அதை நினைத்து நான் வருத்தத்தில் இருப்பதாக நினைக்கிறேன்.

வங்கதேச அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறேன். ஆனால், நான் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும். நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். நான் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்காததால் அணியில் இடம்பெறவில்லை. அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னை தெரசா பிறந்த தின விழா: தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்

கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்: 35 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கல்

மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக் கால் வழங்கல்

விநாயகா் சதுா்த்தி: ஒசூரில் 100க்கும் மேற்பட்ட சிலைகளை அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT