சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் படம் | டிசிசிஐ
கிரிக்கெட்

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா சாம்பியன்!

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இலங்கையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய யோகேந்திர பதோரியா 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா சாம்பியன்

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்களின் முடிவில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ராதிகா பிரசாத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் விக்ராந்த் கெனி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாயல்குடியில் நாய்கள் கடித்து 7 போ் காயம்

கஞ்சா கடத்தல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

மீனவா்களுக்கு அவசர கால விழிப்புணா்வு

ராமநாதபுரத்தில் பலத்த மழை: தாழ்வான இடங்களில் தண்ணீா் தேக்கம்

பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT