BCCI
கிரிக்கெட்

முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!

சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக் ஷர்மா...!

DIN

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டுத் திடலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டுமே தனியாளாக போராடினார். அவர் 68 ரன்கள் திரட்டிய நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றிபெற இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கும் சூர்யகுமார் யாதவ் ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்தனர்.

இன்னொருபுறம் சிக்ஸர் மழை பொழிந்த தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT