முகப்பு
கிரிக்கெட்

7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி..! ரவி சாஸ்திரி விமர்சனம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது குறித்து...

Updated On : 3 ஜூலை 2025, 12:55 pm IST
ஜஸ்பிரித் பும்ரா - படம்: ஏபி
பகிர்:

இந்தியாவின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது ஆச்சரியம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பர்மிங்ஹாமில் நேற்று (ஜூலை 2) தொடங்கிய 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல்நாள் முடிவில் இந்திய அணி 310/5 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் பும்ரா இல்லாமல் களமிறங்கியது மிகுந்த விமர்சனத்துக்குள் உள்ளாகி வருகிறது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியுற்றதால் இந்தியாவின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவியில் பேசியதாவது:

உலகின் சிறந்த பந்துவீச்சாளரை இப்படி செய்வதா?

இந்தத் தொடரில் இந்தப் போட்டி மிக முக்கியமானது. ஏற்கெனவே, இந்திய அணி நியூசிலாந்திடம் 3-0 எனவும் ஆஸ்திரேலியாவிடம் 3-1 எனவும் தோல்வியுற்றது.

இங்கிலாந்திடம் முதல் போட்டியை தோற்ற பிறகு வெல்வதற்குதான் முயற்சிக்க வேண்டும்.

உலகின் சிறந்த பந்திவீச்சாளரான பும்ராவை 7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் அணியில் விளையாட வைக்காதது நம்புவதற்கே கடினமாக இருக்கிறது.

இந்தப் போட்டியில் வென்று 1-1ஆன பிறகு லார்ட்ஸ் போட்டியில் வேண்டுமானால் ஓய்வு எடுத்திருக்கலாம். யார் போட்டியில் விளையாட வேண்டுமென்பது கேப்டன், பயிற்சியாளர் கையில்தான் இருக்கிறது என்றார்.

summary

Former India head coach Ravi Shastri expressed disbelief at India's decision to rest a fully fit Jasprit Bumrah from the second Test against England, asserting that the pace spearhead should not have been given the option to sit out of a crucial game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.