இந்திய அணி வீரர்கள் படம் | AP
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது; தென்னாப்பிரிக்காவை எச்சரிக்கும் கங்குலி!

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் தொடங்குகிறது.

சௌரவ் கங்குலி (கோப்புப் படம்)

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்காவை சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த சுற்றுப்பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது. இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை. இந்திய துணைக் கண்டத்தில் இந்திய அணி மிகவும் வலிமையான அணி. வெளிநாடுகளிலும் இந்திய அணி வலுவான அணியாக மாறியுள்ளது.

ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்க அணியும் மிகவும் வலுவான அணி. அதனால், இந்த தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என்றார்.

Former Indian captain Sourav Ganguly has warned South Africa that a Test series against India on home soil will never be easy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையம் SIR பணிகளைத் தொடரலாம்!: உச்சநீதிமன்றம்! | செய்திகள்: சில வரிகளில் | 11.11.2025

குத்துப் பாட்டுக்கு நடனமாடியுள்ள ஸ்ரேயா..! புஷ்பா சமந்தாவை விஞ்சுவாரா?

தில்லி கார் வெடிப்புக்கு ஆதரவு? சமூக வலைதளங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!

SCROLL FOR NEXT