முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது; தென்னாப்பிரிக்காவை எச்சரிக்கும் கங்குலி!

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

Updated On : 11 நவம்பர், 2025 at 10:52 AM
இந்திய அணி வீரர்கள்
பகிர்:

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் தொடங்குகிறது.

சௌரவ் கங்குலி (கோப்புப் படம்)

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்காவை சௌரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த சுற்றுப்பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது. இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை. இந்திய துணைக் கண்டத்தில் இந்திய அணி மிகவும் வலிமையான அணி. வெளிநாடுகளிலும் இந்திய அணி வலுவான அணியாக மாறியுள்ளது.

ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்க அணியும் மிகவும் வலுவான அணி. அதனால், இந்த தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என்றார்.

summary

Former Indian captain Sourav Ganguly has warned South Africa that a Test series against India on home soil will never be easy.

முழு கட்டுரையைப் படிக்க →