கொல்கத்தா டெஸ்ட்: தெ.ஆ. பேட்டிங், துருவ் ஜுரெல், ரிஷப் பந்த் சேர்ப்பு!
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது பற்றி...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தற்போது, 11 ஓவர்கள் முடிவில் 57/1 ரன்கள் எடுத்துள்ளது. ரியான் ரிக்கல்டன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தாவில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் தெ,ஆ. பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டிக்குப் பதிலாக துருவ் ஜுரெல் இடம் பெற்றுள்ளார். ரிஷப் பந்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேல்.எல்.ராகுல் உள்பட மூன்று விக்கெட் கீப்பர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பாக விளையாடிவந்த ரிக்கல்டனை பும்ரா போல்ட் ஆக்கினார்.
summary