விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தெ.ஆ. வீரர்கள்.  படம்: ஏபி
கிரிக்கெட்

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

இந்திய மண்ணில் தெ.ஆ. அணியின் வரலாற்று வெற்றி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

தெ.ஆ. அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவை 2-0 என ஒயிட்வாஷ் செய்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்றது.

குவாஹாட்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 489/10 ரன்கள் எடுக்க, இந்தியா 201/10 என்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் தெ.ஆ. 260/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தெ.ஆ. அணி தொடரை வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2000-இல் ஹான்ஸி குரொன்யே தலைமையிலான அணி வென்றிருந்தது.

தற்போது, டெம்பா பவுமா தலைமையில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

The South African team has recorded a historic victory on Indian soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT