முகப்பு
கிரிக்கெட்

இந்தியா பேட்டிங்: பிளேயிங் லெவனில் ருதுராஜ்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி குறித்து...

Updated On : 30 நவம்பர், 2025 at 12:02 PM
தெ.ஆ. கேப்டன் மார்கரம், இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்.
பகிர்:

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

எம்.எஸ்.தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க ரோஹித் - கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒருநாள் அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணி 9 ஓவர் முடிவில் 72/1 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவின் கேட்ச் 1 ரன்னில் தவறவிடப்பட்டதும் தற்போது அதிரடியாக விளையாடி வருகிறார்.

இந்திய அணியினர் பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்க அணி பிளேயிங் லெவன்

ரியான் ரிக்கல்டன், குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டெவால்ட் ப்ரீவிஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், பிரேனெலன் சுப்ரயன், நந்த்ரே பர்கர், ஒட்னீல் பார்ட்மேன்.

summary

The Indian team is batting in the first ODI against South Africa.

முழு கட்டுரையைப் படிக்க →