மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!
நியூசிலாந்து - ஆஸி. இடையேயான 2-ஆவது டி20 போட்டி கைவிடப்பட்டது குறித்து...
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது.
மழையின் காரணமாக இந்தப் போட்டி 2.1 ஓவர்களில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
Advertisement
Advertisement
முதல் டி20யில் ஆஸி. அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மழையின் காரணமாக போட்டி 9 ஓவர்களாகக் குறைக்கபட்ட நிலையில், 2.1 ஓவர்களில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸி. டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கைவிடப்பட்ட போட்டி ஆசுவாசத்தை அளித்ததாகக் கூறினார்.
சேப்பல்-ஹாட்லி கோப்பையை கடைசியாக நியூசிலாந்து அணி 2017-க்குப் பிறகு வென்றதே இல்லை. இந்தத் தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது.
கடைசி டி20 நாளை (அக்.4) நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து தொடரை சமன்செய்யுமா அல்லது ஆஸி. மீண்டும் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
The second T20 match between New Zealand and Australia has been abandoned.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.