பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

விரைவில் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகியுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டியில் முழுமையாக விளையாட முடியாது எனத் தெரிந்தால், நான் ஒருபோதும் போட்டியில் விளையாட மாட்டேன். ஆட்டத்தை முழுவதும் விளையாட முடிந்தால் மட்டுமே நான் போட்டியில் இடம்பெறுவேன். வீரர் ஒருவர் சில ரிஸ்க்குகள் எடுத்து முடிந்த வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர்கள் வீச வேண்டியிருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அதிக அளவிலான ஓவர்கள் வீச வேண்டியிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது, சில அசௌகரியங்கள் இருந்தன. பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம். ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 400-க்கும் அதிகமான ஓவர்களை பாட் கம்மின்ஸ் வீசியுள்ளார். ஆனால், இந்த ஆண்டு இதுவரையிலான 9 மாதங்களில் 175.1 ஓவர்கள் மட்டுமே அவர் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Australian captain Pat Cummins has said that he is willing to take risks to play in the Ashes series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

திருமலையில் 70,247 பக்தா்கள் தரிசனம்

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT