பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது; இளம் ரசிகர்கள் கருத்து!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் ஒரு முறையும், சூப்பர் 4 சுற்றில் ஒரு முறையும் மோதின. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 3-வது முறையாக பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து இந்திய ரசிகர்கள் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிப்பார். பாகிஸ்தான் அணியில் இளம் வீரர் சைம் ஆயுப் நன்றாக செயல்படுவார். ஆசிய கோப்பையை இந்திய அணி எளிதில் வெல்லும்.
அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார். அவர் விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறோம். பாகிஸ்தான் அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது. இந்திய அணி ஆசிய கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களுக்குள் இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்திய அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Many young fans have spoken out in support of India, saying that Pakistan cannot defeat India in the Asia Cup final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.