ஐபிஎல்: டாஸ் வென்ற பாண்டியா பேட்டிங் தேர்வு
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிக்க | ஐபிஎல் பிளே-ஆஃப் நடைபெறுவது எங்கு? ஜெய் ஷா தகவல்
பனிப் பொழிவு பெரிதளவில் தாக்கத்தை உண்டாக்காது என்பதால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததாக அவர் விளக்கமளித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது.
புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.