படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்து பசுமை தீர்ப்பாயம் கேள்வி.

DIN

ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்த விவரங்களை கர்நாடக கிரிக்கெட் வாரியத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே கர்நாடகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகள் பெங்களூருவில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், போட்டிகள் எந்தவித தடையுமின்றி நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்த விவரங்களை கர்நாடக கிரிக்கெட் வாரியத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தக் கேள்விக்கு கர்நாடக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவிப்பை நாங்கள் வாசித்தோம். பெங்களூரு கிரிக்கெட் மைதானம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், தொடர்ச்சியாக போட்டியை நடத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீரை தேவையில்லாமல் பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT