FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக மாற்று வீரரை தில்லி கேப்பிடல்ஸ் அறிவித்துள்ளது.

8 ஏப்ரல் 2024, 6:02 pm IST
ஹாரி ப்ரூக் (கோப்புப்படம்) - படம் | ஐபிஎல்
பகிர்:

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக மாற்று வீரரை தில்லி கேப்பிடல்ஸ் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தில்லி கேப்பிடல்ஸ் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். தில்லி கேப்பிடல்ஸ் அவரை ரூ. 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக தில்லி கேப்பிடல்ஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஹாரி ப்ரூக்குப் பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் அணியில் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதாகும் லிஸாத் வில்லியம்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments