10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டாஸ் தோல்வி குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரின் 49ஆவது போட்டியில் சென்னை சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தாண்டு முதல் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை நடந்த 10 போட்டிகளில் 9 முறை டாஸில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இது குறித்து ருதுராஜ், “எனது டாஸ் சாதனையை பார்த்த எங்களது அணியின் பெரும்பாலான வீரர்கள், நான் டாஸில் தோற்பேன் என தெரிந்து முதலில் பேட்டிங் செய்ய தயாராகிவிட்டனர்”என சிரித்துக்கொண்டே பேசினார்.
Advertisement
Advertisement
ஏற்கனவே இது குறித்து டாஸ் பயிற்சியில் ஈடுபடுமாறு தோனி கூறியதாக கூறியிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.