படம் | ஐபிஎல்
ஐபிஎல்

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார்.

DIN

பாட் கம்மின்ஸ் மற்றும் அணியில் உள்ள அனைவரிடத்திலிருந்தும் அதிக ஆதரவு கிடைப்பதால் வெற்றிகரமாக செயல்பட முடிவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி வெறும் 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் எடுத்து அசத்தினர்.

அபிஷேக் சர்மா

இந்த நிலையில், பாட் கம்மின்ஸ் மற்றும் அணியில் உள்ள அனைவரிடத்திலிருந்தும் அதிக ஆதரவு கிடைப்பதால் வெற்றிகரமாக செயல்பட முடிவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் யோசிப்பதைப் போன்று வேறு யாரும் யோசித்து நான் பார்த்ததில்லை. எனது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்கள். உன்னால் முடிந்தவரை அதிரடியாக விளையாடு என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களது நிபந்தனையற்ற இந்த ஆதரவு என்னை வெற்றிகரமாக செயல்பட வைப்பதாக நினைக்கிறேன் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 401 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT