படம் | AP
ஐபிஎல்

ஆர்சிபி அபார பந்துவீச்சு; விக்கெட்டுகளை இழந்து திணறும் பஞ்சாப் கிங்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடி வருகிறது.

விக்கெட்டுகளை இழந்து திணறல்

முதலில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் யஷ் தயாள் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின், பிரப்சிம்ரன் சிங் (18 ரன்கள்), ஜோஷ் இங்லிஷ் (4 ரன்கள்), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்கள்), நேஹல் வதேரா (8 ரன்கள்), ஷஷாங் சிங் (3 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

யஷ் தயாள் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT