ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் ஆடவர் 91+ கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகோதிர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க | ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் பூஜா ராணி காலிறுதியில் தோல்வி
இதன்மூலம், சதீஷ் குமார் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் பதக்கத்தை உறுதி செய்திருப்பார்.