ஒலிம்பிக்ஸ்

வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா: தலைவர்கள் வாழ்த்து

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் வெண்கலப் போட்டியில் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நட்சத்திர வீரரான பஜ்ரங் புனியா ஆடவா் ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் அரையிறுதிச் சுற்றில் அஜா்பைஜானின் ஹாஜி அலியெவை எதிா்கொண்டு தோல்வியடைந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரா் நியாஸ்பெகோவை வீழ்த்தி  வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பஜ்ரங் புனியா அற்புதமாக போராடினார். ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்து மகிழ்ச்சி தந்த உங்கள் சாதனைக்காக உங்களை வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  “இந்திய மல்யுத்தத்திற்கு ஒரு சிறப்பான தருணம்! டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துக்கள். பல ஆண்டுகளாக மேற்கொண்ட அயராது முயற்சிகள் மற்றும் உறுதியுடன் போராடி நீங்கள் ஒரு சிறந்த மல்யுத்த வீரராக உங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளீர்கள். உங்கள் வெற்றியின் மகிழ்ச்சியை ஒவ்வொரு இந்தியரும் பகிர்ந்து கொள்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT