முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ தலைமைத் தளபதி ஆகியோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை நேரில் சந்தித்து பாராட்டினர்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததும் நேற்று (ஆக. 9) நாடு திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கெளரவிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கம் வென்ற ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ராவை முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேரில் அழைத்து பாராட்டினார்.
இதேபோன்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவாணேவும் நீரஜ் சோப்ராவை நேரில் அழைத்து பாராட்டினார்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ராணுவத்தில் சுபேதராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.