ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி

இந்தியாவின் தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை விளையாட்டில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

மகளிர் தனிநபர் பிரிவில் முதல் சுற்றில் பூட்டானைச் சேர்ந்த கர்மாவை எதிர்கொண்டார் தீபிகா குமாரி. இதில் 6-0 என எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது ஜெனிபருடன் மோதினார். தீபிகா குமாரிக்கு ஜெனிபர் கடும் சவாலாக விளங்கினார். இறுதியில் 6-4 என்கிற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி தகுதி பெற்றார். கடைசிக்கட்டத்தில் ஜெனிபர் 10 புள்ளிகள் எடுக்கவேண்டியபோது 9 புள்ளிகளை எடுத்ததால் நூலிழையில் வெற்றி பெற்றார் தீபிகா குமாரி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோக்கி ஆய்வு!

வீட்டிற்குள் புகுந்த மழைநீர்! சிக்கியவர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

நிதி ஒதுக்கீடு செய்தும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை: விஜய்

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT