முகப்பு
செய்திகள்

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! 

லண்டன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! 

லண்டன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:40 PM
பகிர்:

பர்மிங்காம்: லண்டன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அதில் இன்றைய போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. 

இந்நிலையில் லண்டனில் நேற்று லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட  பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பயங்கரவாத தாக்குதல்கள்  நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து  இன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பர்மிங்காம் நகரில் இந்திய அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →