முகப்பு
செய்திகள்

இலங்கை நிலவரம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருத்தம்!

இலங்கையில் நடப்பது மிகவும் வேதனையானது. அருமையான மக்களைக் கொண்ட அருமையான நாடு அது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:25 PM
பகிர்:

இலங்கையில் 10 நாள்களுக்கு அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. கண்டியில் சிங்கள புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கை நிலவரம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் கூறியதாவது:

இலங்கையில் நடப்பது மிகவும் வேதனையானது. அருமையான மக்களைக் கொண்ட அருமையான நாடு அது. வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட மக்களிடையேயான மோதல் விரைவில் முடிவுபெறும். வாழு, வாழ விடு. வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது முக்கியம். அங்கு இயல்பு நிலை திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →