முகப்பு
செய்திகள்

புரோ வாலிபால் லீக் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.

Updated On : 15 மே, 2018 at 1:11 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக இந்திய வாலிபால் சம்மேளனம், புரோ வாலிபால் லீக் சிஇஓ ஜாய் பட்டாச்சார்யா கூறியதாவது:
வாலிபால் புரோ லீக் போட்டிகள் தொடங்குவது நாட்டில் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்காக விஎஃப்ஐ பேஸ்லைன் வென்ட்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஏலமும் தற்போது தொடங்கப்படுகிறது.
முதல் சீசனில் 6 பங்குதாரர்களை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம். ஒவ்வொரு ஏலதாரரும் 2 நகரங்களுக்கு ஏலத்தில் போட்டியிடலாம். இறுதியில் இறுதி ஏலத்தில் வெற்றி பெறும் 6 ஏலதாரர்கள் தீர்மானிக்கப்படுவர்.
வட இந்தியா, தென்னிந்தியாவில் ஒன்று என தலா 2 நகரங்களில் லீக் போட்டிகள் உள்விளையாட்டரங்கில் நடத்தப்படும். 18 ஆட்டங்கள் கொண்டிருக்கும். தேசிய அணிக்காக விளையாடும் வீரர்கள் மற்றும் சர்வதேச வாலிபால் சம்மேளனம் உறுப்பு நாடுகளின் வீரர்களும் அணிகளில் இடம் பெறுவர்.
வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் ஜூலை மாதம் நடைபெறும். ஏலப்பட்டியலில் 90 இந்திய வீரர்களின் பெயர்கள் உள்ளன. வெளிநாட்டு வீரர்களை வரைவின் மூலம் தேர்வு செய்யலாம். ஜாகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கு பின்னர் வாலிபால் லீக் போட்டிகள் தொடங்கும் என்றார் பட்டாச்சார்யா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.