முகப்பு
செய்திகள்

அமிருதசரஸ் ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அஃப்ரிடி: கெளதம் கம்பீர் பாராட்டு!

அமிருதசரஸ் ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாராட்டு... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

அமிருதசரஸ் ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமிருதசரஸ் அருகே கடந்த 19ம் தேதி தசரா நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் ரயில் தண்டவாளம் மீது நின்று ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இத்துயர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதையடுத்து ட்விட்டரில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி கூறியதாவது: மிகவும் மோசமான சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள். இந்த இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வர அல்லா அவர்களுக்கு மனவலிமை அளிப்பார். அல்லா நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

அஃப்ரிடியின் இரங்கல் குறித்து ட்விட்டரில் கம்பீர் கூறியதாவது:

எனக்கும் அஃப்ரிடிக்கும் முன்பு மோதல் நடந்த வரலாறு இருக்கலாம். ஆனால் அமிருதசரஸ் ரயில் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்ததற்கு அவரைப் பாராட்டுகிறேன். இந்தியர்கள் அனைவரும் அவருடைய இந்தக் குணத்தைப் பாராட்டுவார்கள். இரங்கல் தெரிவித்த சோயிப் அக்தருக்கும் நன்றி என்று கூறியுள்ளர்.

முழு கட்டுரையைப் படிக்க →