ஆசியக் கோப்பை: வங்கதேசம் பேட்டிங்! முழுப் பலத்துடன் களமிறங்கியுள்ள இந்திய அணி!
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளார்கள்.
செய்திகள்ஆசியக் கோப்பை: வங்கதேசம் பேட்டிங்! முழுப் பலத்துடன் களமிறங்கியுள்ள இந்திய அணி!
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளார்கள்.
துபையில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளார்கள். கடந்த ஆட்டத்தில் இடம்பெறாத ரோஹித் சர்மா, தவன், சாஹல், புவனேஸ்வர் குமார், பூம்ரா ஆகிய ஐந்து பேரும் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். வங்கதேச அணியில், நஸ்முல் இஸ்லாம் இடம்பிடித்துள்ளார்.