முகப்பு
செய்திகள்

ஈரான் சர்வதேச குத்துச்சண்டை: அரையிறுதியில் 3 இந்திய வீரரகள்

ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:19 am IST
பகிர்:


ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
சபாஹர் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் காமன்வெல்த் வெள்ளி வீரர் மணிஷ் 60 கிலோ பிரிவில் 5-0 என சலார் மெளமிவண்டை வீழ்த்தினார். அதே போல் முன்னாள் தேசிய சாம்பியன் துரியோதன் சிங் நேஹி 69 கிலோ, ரோஹித் டோகஸ் 64 கிலோ பிரிவுகளில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
81 கிலோ பிரிவில் மணிஷ் பவார் மட்டுமே தோல்வியுற்றார். தொடர்ந்து 8 பேர் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.