செய்திகள்

உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் XI குறித்து தெளிவாக உள்ளோம்: விராட் கோலி

எழில்

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்களுக்கு வீழ்ந்தது. 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் காஜா 100 ரன்கள் விளாசினார். இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இந்தத் தோல்வியால் ஓய்வறையில் யாரும் பீதியடையவில்லை. பயிற்சியாளர்கள் யாரும் மனம் தளரவில்லை. ஏனெனில் கடைசி 3 ஒருநாள் ஆட்டங்களில் என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த ஒருநாள் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடவேண்டும் என்பதால். நாங்கள் நல்ல அணியாக இருந்தாலும் நெருக்கடியான கட்டங்களில் ஆஸ்திரேலியா எங்களை விடவும் சிறப்பாக விளையாடியது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கிட்டத்தட்ட சரியான அணியைக் கொண்டுள்ளோம். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப ஒரேயொரு மாற்றம் மட்டுமே இருக்கும். அதைத் தவிர, உலகக் கோப்பைப் போட்டியில் எந்த லெவனைக் கொண்டு விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 

கடைசி 3 ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தோம். குறிப்பிட்ட சூழலில் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்க எண்ணினோம். இதை ஒரு சாக்காகச் சொல்லவில்லை. ஆனால் கடைசி மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் சிலருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT