முகப்பு
செய்திகள்

இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?: ஆர்சிபியை கலாய்த்த ஹர்பஜன் சிங் 

இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ? என்று இவ்வாண்டு ஐ.பி.எல்லின் முதல் போட்டியில் சென்னையிடம் தோற்ற  ஆர்சிபி அணியினை ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

சென்னை: இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ? என்று இவ்வாண்டு ஐ.பி.எல்லின் முதல் போட்டியில் சென்னையிடம் தோற்ற  ஆர்சிபி அணியினை ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 12-ஆவது சீசன் சென்னையில் சனிக்கிழமையன்று துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சரஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகனாகத் தேந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ? என்று இவ்வாண்டு ஐ.பி.எல்லின் முதல் போட்டியில் சென்னையிடம் தோற்ற  ஆர்சிபி அணியினை ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன  @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →