செய்திகள்

யு-18 உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார்.

எழில்

மும்பையில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார்.

இந்தியா முதல்முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். யு-14 போட்டி, யு-14 மகளிர் போட்டி, யு-16 போட்டி, யு-16 மகளிர் போட்டி, யு-18 போட்டி, யு-18 மகளிர் போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 14 வயதைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, யு-18 பிரிவில் போட்டியிட்டார்.

கடைசி சுற்றுக்கு முன்பு வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, இன்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை எதிர்கொண்டார். டிரா செய்தால் போதும் என்கிற நிலையில் ஆட்டத்தை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆகியுள்ளார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார். 

12 வயது 10 மாதம், 13 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன பிரக்ஞானந்தா, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். எனினும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு இளம் செஸ் வீரர் குகேஷ், 12 வயது ஏழு மாதம் 17 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி, பிரக்ஞானந்தாவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளினார். இந்நிலையில் தற்போது யு-18 உலக சாம்பியன் ஆகியுள்ளார் பிரக்ஞானந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT