FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாங்கள் விளையாடிய காலத்தில் சொந்த நலனுக்காக இந்திய வீரர்கள் சதமடித்தார்கள்: இன்ஸமாம் குற்றச்சாட்டு

நாங்கள் விளையாடிய காலத்தில் சொந்த நலனுக்காக இந்திய வீரர்கள் சதமடித்தார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

நாங்கள் விளையாடிய காலத்தில் சொந்த நலனுக்காக இந்திய வீரர்கள் சதமடித்தார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

ரமீஸ் ராஜாவுடனான உரையாடலில் இன்ஸமாம் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடியபோது எங்களை விடவும் அவர்களுடைய பேட்டிங் பலமாக இருக்கும். எங்கள் அணி வீரர்கள் 30,40 ரன்கள் எடுத்தாலும் அது அணியின் நலனுக்காக இருக்கும். ஆனால், இந்திய வீரர்கள் சதமடித்தாலும் அது சொந்த நலனுக்காக இருக்கும். அதுதான் இரு அணி வீரர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்றார்.

Advertisement

Advertisement

1991 முதல் 2007 வரை 120 டெஸ்டுகள், 378 ஒருநாள், 1 டி20-யில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார் இன்ஸமாம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 59 டெஸ்டுகள், 132 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 9 டெஸ்டுகள், 55 ஒருநாள் ஆட்டங்கள், 6 டி20 ஆட்டங்களில் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி 12 டெஸ்டுகள், 73 ஒருநாள் ஆட்டங்கள், 1 டி20 ஆட்டத்தில் வென்றுள்ளது. எனினும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் இந்திய அணி வென்றுள்ளது. ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments