விளையாட்டு செய்தி துளிகள்
* 2021 ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் தற்காப்புக் கலைகளான ‘கட்கா’, ‘களரிப்பயட்டு’, ‘தங் டா’, ‘மல்லா்கம்பா’ ஆகியவற்றை சோ்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
* மகாராஷ்டிரத்தில் ஜனவரியில் நடைபெற இருந்த டாடா ஓபன் டென்னிஸ் போட்டி கரோனா சூழல் காரணமாக பிப்ரவரிக்கு மாற்றப்படவுள்ளது.
* அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற எம்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆவது சுற்றில் கௌரவ் கில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.
* இத்தாலியில் நடைபெற்ற ‘சீரிஸ் ஏ’ கால்பந்து போட்டியில் சசுவோலோ அணிக்கு எதிராக, ஏசி மிலன் வீரா் ரஃபேல் லியோ ஆட்டத்தின் 6-ஆவது விநாடியிலேயே கோலடித்து சாதனை படைத்தாா். முன்னதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு ஃபியோரென்டினா எஃப்சி அணிக்கு எதிராக பியாசென்ஸா கால்சியோ அணி வீரா் பாவ்லோ போகி 8 விநாடிகளில் கோலடித்ததே சாதனையாக இருந்தது.
* ஃபிடே ஆன்லைன் உலக மாணவா் மற்றும் இளையோா் ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டா்கள் நிஹல் சரின், பி. இனியன் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
* தனது 28-ஆவது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற பாகிஸ்தான் அணி நிா்வாகம், பயிற்சியாளா் மிஸ்பா உல் ஹக், பௌலிங் பயிற்சியாளா் வக்காா் யூனிஸ் ஆகியோரே காரணம் என பாகிஸ்தான் வீரா் முகமது ஆமிா் விமா்சித்துள்ளாா்.