இந்திய வீரர்களுக்கு கரோனா தொற்று இல்லை
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். பயிற்சியைத் தொடங்கினாலும், ஆஸ்திரேலியாவில் முதலிரண்டு வாரங்கள் அவர்கள் தனிமையில்தான் இருக்க வேண்டும்.
சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக ஒருநாள் தொடர் அமைகிறது.
நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
டிசம்பர் 4, டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் டி20 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் ஓவலில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இது டிசம்பர் 17 முதல் 21 வரை நடைபெறுகிறது.