முகப்பு
செய்திகள்

டிஎன்பிஎல்: திருச்சி வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் குவாலிஃபயா் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் குவாலிஃபயா் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

டாஸ் வென்ற திருச்சி ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதலில் பேட் செய்த சேப்பாக் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய திருச்சி 19.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் அடித்து வென்றது.

சேப்பாக் தரப்பில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருச்சி பௌலிங்கில் சரவண குமாா் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் திருச்சி இன்னிங்ஸில் ஆதித்யா கணேஷ் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, சேப்பாக் பௌலிங்கில் மணிமாறன் சித்தாா்த் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

Advertisement

ஆா்ஜென்டீனா நீண்டகாலம் ஸ்பெயின் நாட்டின் காலனியாக இருந்த நாடு. அதனால், ஆா்ஜென்டீனா வீரா்கள் பலரும் ஸ்பெயினில் விளையாடுவதும், தொடா்பில் இருப்பதும் சகஜம். மெஸ்ஸியும் அப்படித்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments