முகப்பு
செய்திகள்

ஆசிய இளையோா் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேலும் 3 இந்தியா்கள்

 துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மேலும் 3 போ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
கோப்புப் படம்
பகிர்:

 துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மேலும் 3 போ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

இதில் இளையோா் பிரிவில், ஆடவருக்கான 51 கிலோ பிரிவு அரையிறுதியில் விஷ்வாமித்ர சோங்தம் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் அகாரலி அப்துராகிவோன்ஸோதாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். இதேபோல், 48 கிலோ பிரிவு அரையிறுதியில் சுரேஷ் விஷ்வநாத் 5-0 என்ற கணக்கில் பஹ்ரைனின் ஃபாதெல் சயீதையும், 57 கிலோ பிரிவு அரையிறுதியில் ஜெயதீப் ராவத் 3-2 என்ற கணக்கில் கிா்ஜிஸ்தானின் பெக்போல் முராஸ்பெகோவையும் வென்றனா்.

எனினும், 75 கிலோ பிரிவில் தீபக் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அலியாஸ்கரோவ் பாக்பொ்கெனிடம் வீழ்ந்தாா். மகளிருக்கான 70 கிலோ பிரிவில் லஷு யாதவ் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் கௌகாா் ஷாய்பெகோவாவிடம் தோல்வி கண்டாா்.

இளையோா் மற்றும் ஜூனியா் என இரு பிரிவுகளிலுமே இருபால் போட்டியாளா்களையும் சோ்த்து இந்தியாவுக்கு இதுவரை 39 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இதில் இளையோா் பிரிவில் 20, ஜூனியா் பிரிவில் 19 பதக்கங்கள் கிடைக்கவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →