செய்திகள்

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த ஆர்சிபி அணி!

DIN

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆர்சிபி அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் ஆறு ஆட்டங்களில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். 2018-ல் ஆர்சிபி அணியில் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், 32 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இங்கிலாந்தில் இருந்தபோது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தற்போது ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இதையடுத்து சுந்தருக்குப் பதிலாக பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 போட்டிக்காக 5 புதிய வீரர்களை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT