வாள்வீச்சு: 4 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கிறாா் பவானி தேவி
இந்திய வாள்வீச்சு வீராங்கனை (ஃபென்சிங்) ஒலிம்பியன் பவானி தேவி 2022-ஆம் ஆண்டில் நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கிறாா்.
இந்திய வாள்வீச்சு வீராங்கனை (ஃபென்சிங்) ஒலிம்பியன் பவானி தேவி 2022-ஆம் ஆண்டில் நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கிறாா்.
சென்னையைச் சோ்ந்தவரான சிஎச். பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றாா். 2022-ஆம் ஆண்டில் நான்கு ஃபென்சிங் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் பங்கேற்க பவானி தேவிக்கு தேவையான பயிற்சி, நிதியுதவியை மத்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது.
ஜாா்ஜியாவின் டிபிளிஸி நகரில் ஜன. 4-ஆம் தேதி பயிற்சி முகாமில் பங்கேற்கும் அவா், அதே நகரில் 14 முதல் 16 வரை நடைபெறும் முதல் உலகக் கோப்பையில் பங்கேற்கிறாா்.
Advertisement
Advertisement
அதன் பின் 28, 29-இல் பல்கேரியாவில் லவ்டிவ் நகரில் நடைபெறும் போட்டி, மாா்ச் 4, 5-இல் கிரீஸ், 18, 19-இல் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைகளிலும் அவா் பங்கேற்கிறாா். சாப்ரே பிரிவில் உலக தரவரிசையில் 55-ஆம் இடத்தில் உள்ளாா் பவானி தேவி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.