செய்திகள்

காமன்வெல்த் பாரா பளுதூக்குதல்: தங்கம் வென்ற இந்திய வீரர்

DIN

காமன்வெல்த் போட்டிகளில் பாரா பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சுதிர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் விளையாட்டில் ஹெவிவெயிட் பிரிவில் 212 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார் இந்தியாவின் சுதிர் சிங். காமன்வெல்த் போட்டிகளில் சாதனையை ஏற்படுத்தி அவர் தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி பெறும் 8-வது தங்கம் இது. மேலும் 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 22 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. 

இந்த வெற்றியைக் கொண்டாட லண்டனில் நன்கு சுற்றப் போகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, 2024 ஒலிம்பிக்ஸ் என இரு முக்கியப் போட்டிகளிலும் தங்கம் வெல்ல முயல்வேன் என்று சுதிர் பேட்டியளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

SCROLL FOR NEXT