தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தில்லி அணி, 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழக அணி 3 புள்ளிகளும் தில்லி அணி 1 புள்ளியும் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மோதுகின்றன. தில்லி அணியிலிருந்து நிதிஷ் ராணா நீக்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா, சைனி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தில்லி அணியின் துருவ் ஷோரே 66, ஜான்டி சித்து 57 ரன்கள் எடுத்தார்கள். எல். விக்னேஷும் சந்தீப் வாரியரும் நன்குப் பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
முதல் நாள் முடிவில் தில்லி அணி, 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. லலித் யாதவ் 33, பிரான்ஷு 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.