செய்திகள்

15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வெளிநாட்டு வீரர்

15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்கிற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ பெற்றுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டி 2008-ல் தொடங்கியது. இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 14 போட்டிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் நான்கு வீரர்கள்தாம்.

ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ், டுவைன் பிராவோ.

இந்த நால்வரில் டி வில்லியர்ஸ், கெயில், ஷான் மார்ஷ் ஆகிய மூவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. ஏலப் பட்டியலிலும் அவர்களின் பெயர் இல்லை.

இதனால் 15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்கிற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ பெற்றுள்ளார். இந்தமுறை ஏலப்பட்டியலில் பிராவோவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடிப்படை விலை - ரூ. 2 கோடி. 

ஐபிஎல் போட்டியில் மும்பை, குஜராத், சென்னை ஆகிய அணிகளில் பிராவோ விளையாடியுள்ளார். ஏலத்தில் சிஎஸ்கே உள்பட பல அணிகள் பிராவோவைத் தேர்வு செய்ய ஆர்வம் காண்பிக்கும் எனத் தெரிகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

மறுவெளியீட்டில் கலக்கும் மோகன்லால் திரைப்படம்!

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே... பிரணிகா!

தகவல் அறியும் உரிமை சட்டம் அமைப்பு ரீதியாக சிதைக்கப்பட்டுவிட்டது! -கார்கே

SCROLL FOR NEXT