முகப்பு
செய்திகள்

4-வது டி20 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணி

மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
மேக்ஸ்வெல் (கோப்புப் படம்)
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

ஏற்கெனவே 3 டி20 ஆட்டங்களையும் வென்று தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்போர்னில் இன்று நடைபெற்ற 4-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆஸி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் நிஸ்சாங்கா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். 

இந்த இலக்கைச் சுலபமாக விரட்டியது ஆஸ்திரேலிய அணி. 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 4-வது டி20 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. ஜோஷ் இங்லிஷ் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 4-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →