செய்திகள்

கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சி: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.

DIN

கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கத்தாா் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தாா். அதனை ஏற்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கத்தாா் சென்றாா். இந்த பயணத்தின்போது கத்தாரில் உள்ள இந்திய சமூகத்தினருடன் ஜகதீப் தன்கா் கலந்துரையாட உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

கத்தாரில் ஜகதீப் தன்கா் 2 நாள்கள் தங்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, கத்தாா் இடையே ராஜீய உறவு ஏற்பட்டு அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டு இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் 15 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.1.22 லட்சம் கோடி) கடந்தது. அந்நாட்டில் 8.40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT