செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார் ஹர்மன்ப்ரீத். ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களில் 221 ரன்களை எடுத்தார். 1999-க்குப் பிறகு இங்கிலாந்தில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி. இதையடுத்து செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார். சக வீராங்கனை மந்தனா, வங்கதேச வீராங்கனை நிகர் சுல்தானை ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த விருதை வென்றுள்ளார்.
33 வயது ஹர்மன்ப்ரீத் கெளர், இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 124 ஒருநாள், 135 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.