செய்திகள்

இந்த இரு வீரர்களையா தேர்வு செய்யவில்லை?: அசாருதீன் ஆச்சர்யம்!

இந்திய அணியில் இரு வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்துத் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்...

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இரு வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்துத் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி முன்னாள் கேப்டன் அசாருதீன் ட்விட்டரில் கூறியதாவது:

பிரதான அணியில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர், ஷமியை நீக்கியது பற்றி ஆச்சர்யப்படுகிறேன். தீபக் ஹூடாவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக ஷமி என்பதே என்னுடைய தேர்வு என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT