உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் பெற முன்பதிவு தொடங்கியது!
50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கியுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கியுள்ளது.
வருகிற அக்டோபர் 5 முதல் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையை நேரில் மைதானத்தில் காண வருகிற ஆகஸ்ட் 25 முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. இந்த நிலையில், டிக்கெட் பெற முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: தீவிர உடற்பயிற்சியில் விராட் கோலி: வைரல் விடியோ!
டிக்கெட் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் நபர்களுக்கு டிக்கெட் பெறுவதற்கான முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.