செய்திகள்

சூர்யகுமார் அதிரடி சதம்: தென்னாப்பிரிக்காவுக்கு 202 ரன்கள் இலக்கு! 

கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் குவித்துள்ளது. 

DIN

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

தொடக்க வீரரான ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த திலக் வர்மா டக்கவுட்டானார். அடுத்து ஜெய்ஸ்வால்-சூர்யகுமார் ஜோடியினர் அதிரடியாக விளையாடினார்கள்.

ஜெய்ஸ்வால் அதிரடியாக 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கேப்டன் சூர்யகுமார் மிக அதிரடியாக விளையாடி தனது 4வது டி20 சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மேக்ஸ்வெல், ரோஹித்தின் சாதனையை சமன்செய்துள்ளார். 

தென்னாப்பிரிக்கா சார்பில் கேஷவ் மகாராஜா , லிஜாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பர்கர், ஷம்ஸி தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

20 ஓவர் முடிவில் இந்திய அணி 201/7 ரன்கள் எடுத்தது. 1-0 என முன்னிலையில் உள்ள தென்னாப்பிரிக்க அணி தொடரினை கைப்பற்ற 202 ரன்கள் இலக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணாடிப் பார்வை... மோக்‌ஷா கெளஷால்!

புதிதாய் வெட்கம்... குஷி தூபே!

மின்னும் மிர்ணாளினி!

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் இட்லி கடை!

SCROLL FOR NEXT